என் மலர்
இந்தியா

தேசப்பற்றில் தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது - அமித் ஷாவிற்கு கனிமொழி பதிலடி
- நேருவை காங்கிரசை விட பா.ஜ.க. தான் அதிகம் நினைவில் வைத்துள்ளது.
- ஆபரேஷன் சிந்தூருக்காக முதன்முறையாக ஆதரவு பேரணி நடத்தியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* நாட்டை எந்தவிதத்திலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்ததில்லை.
* எங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பது போல் அமித்ஷா பேசுகிறார்.
* ஆளுங்கட்சியை சேர்ந்தோர் எப்போதும் நேருவை பற்றி பேசுவதால் இளைஞர்கள் நேருவை குறித்து படிக்கின்றனர், அதற்கு நன்றி.
* அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் குறித்த விமர்சனங்களால் மாணவர்கள் அவர்களை குறித்தும் அதிகம் படிக்கிறார்கள்.
* நேருவை காங்கிரசை விட பா.ஜ.க. தான் அதிகம் நினைவில் வைத்துள்ளது.
* ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக குழு அமைத்து அனுப்பியதற்காக மத்திய அரசுக்கு நன்றி.
* முதன்முறையாக பா.ஜ.க. எதிர்க்கட்சியினர் மீது நம்பிக்கை வைத்து குழு தலைவர்களாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு தந்ததற்கு நன்றி.
* ஆனால் வெளிநாட்டிற்கு சென்று விளக்க வேண்டிய நிலை வராமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
* தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
* ஆபரேஷன் சிந்தூருக்காக முதன்முறையாக ஆதரவு பேரணி நடத்தியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டும் வகையிலேயே அமித்ஷாவின் பேச்சு இருந்தது.
* தேசப்பற்றில் தமிழர்கள் ஒன்றும் குறைந்தவர்கள் கிடையாது.
* தேர்தல் நடைமுறை, ஜனநாயகத்தை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
* கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் வந்தார். கங்கையை வெல்வான் தமிழன்.
இவ்வாறு அவர் கூறினார்.






