என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை யாரும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி பெருமிதம்
    X

    இந்தியாவை யாரும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி பெருமிதம்

    • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.
    • டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது:

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்தியாவை யாரும் தடுக்கமுடியாது. பல சவால்களில் இருந்து இந்தியா மீண்டுள்ளது.

    140 கோடி இந்தியர்களும் முன்னேறிச் செல்கின்றனர். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது.

    டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது.

    இன்று உலகின் 50 சதவீத டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.

    2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேருக்கு வங்கிக்கணக்கு இல்லை.

    நாங்கள் வங்கி அமைப்பை சீரமைத்ததுடன் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×