search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதே நிலை வந்துவிடக் கூடாது ராமா...! கங்கனாவை சன்னி தியோலுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்
    X

    அதே நிலை வந்துவிடக் கூடாது ராமா...! கங்கனாவை சன்னி தியோலுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர்

    • சன்னி தியோல் தொகுதி மக்கமே செல்லவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
    • கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதிநிதியை நியமித்தாக கூறப்படும் அறிவிப்பை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர்.

    பா.ஜனதா கட்சி இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இத்தொகுதியின் எம்.பி.யாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் பிரதிபா சிங் இருந்து வருகிறார். இவர் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்னும் இந்த தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் பிரதிபா சிங் மகனும், இமாச்சல பிரதேச மாநில மந்திரியுமான விக்ரமாத்தியா சிங், நடிகரும் எம்.பி.யுமான சன்னி தியோல் உடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

    சன்னி தியோல் பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்ற தொகுதிக்கும் செல்வதில்லை என விமர்சனம் வைக்கப்படுகிறது. சன்னி தியோல் தனது தொகுதி கூட்டத்திற்கா தனக்குப்பதிலாக தனது பிரதிநிதியை நியமித்ததாக கூறப்படும் அறிவிப்பை விக்ரமாத்தியா சிங் வெளியிட்டுள்ளார்.

    இதை வெளியிட்டு விக்ரமாதித்யா "அதேபோன்ற நிலை மண்டி தொகுதிக்கும் உருவாகிவிடக் கூடாது என நான் கடவுள் ராமரிடம் வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக இதை நினைத்து பார்க்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×