search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் குறித்த சரத்பவாரின் கணிப்பு பொய்த்துப்போகும்: ஏக்நாத் ஷிண்டே
    X

    பாராளுமன்ற தேர்தல் குறித்த சரத்பவாரின் கணிப்பு பொய்த்துப்போகும்: ஏக்நாத் ஷிண்டே

    • பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது.
    • ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    தானே :

    தேசிவயாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், " கர்நாடக தேர்தல் முடிவு அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவை பிரதிபலிக்கிறது. பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்றார்.

    இந்தநிலையில் நவிமும்பை புதிய விமான நிலைய பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது சரத்பவாரின் விமர்சனத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சரத்பவாரின் கணிப்புகள் அனைத்து தவறாகி உள்ளன. இனியும் அவரது கணிப்புகள் அனைத்து பொய்யாகிவிடும். ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கையில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக எப்படி கூற முடியும்" என்றார்.

    மேலும் நவிமும்பை விமான நிலைய பணிகள் குறித்து பேசிய அவர், " இந்த புதிய விமான நிலையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 கோடி பயணிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். புனே மற்றும் கோவாவை தவிர்த்து மும்பை பெருநகர பகுதியின் தேவையும் இந்த விமான நிலையம் பூர்த்தி செய்யும்" என்றார்.

    Next Story
    ×