என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி நிறுத்தப்படாது: தீங்கு விளைவிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்- அமித் ஷா
    X

    ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி நிறுத்தப்படாது: தீங்கு விளைவிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்- அமித் ஷா

    • ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்த முடியாது. அல்லது தொய்வடைய செய்ய முடியாது.
    • 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிக்கான பணி, மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி மக்கள் வசிக்கும் இடங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைப் பகுதிகள் மீது கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார்.

    பூஞ்ச் சென்ற அமித் ஷா கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்த முடியாது. அல்லது தொய்வடைய செய்ய முடியாது. 2014ஆம் ஆண்டு தொடங்கியது தொடரும். யாராவது எங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்தால், வலுவான மற்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் ஒட்டுமொத்த நாடும் மலை போன்று ஆதரவாக நிற்கிறது.

    பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் செய்யும் செயல்கள் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்தும். பிரதமர் மோடி பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாது. பயங்கரவாதம், வர்த்தகம் ஒன்றாக பயணிக்க முடியாது. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிக்கான பணி, மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும். சுதந்திரத்திற்குப் பிறகு பூஞ்ச் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் பாகிஸ்தான் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது. இந்த ஆத்திரமூட்டலுக்குப் பிறகுதான், நமது படைகள் வலிமையுடனும் துல்லியமாகவும் பதிலளித்தன.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    Next Story
    ×