search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம் - ராகுல்
    X

    பாராளுமன்ற தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம் - ராகுல்

    • நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்?
    • அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது.

    மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார் ? மக்களின் ஒற்றுமை, சுதரந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

    நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

    ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு |ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிளவுவாத | சக்திகள் யார் என நமக்கு தெரியும்.

    அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×