search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2019ல் பெற்ற வெற்றியை பா.ஜ.க.வால் மீண்டும் அடைய முடியாது - சசி தரூர்
    X

    "2019ல் பெற்ற வெற்றியை பா.ஜ.க.வால் மீண்டும் அடைய முடியாது" - சசி தரூர்

    • இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது
    • எதிரணியினர் காட்டும் வேகத்தை பொறுத்தே பா.ஜ.க.வின் வீழ்ச்சி இருக்கும் என்றார் தரூர்

    இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    கூட்டணி அமைப்பதில் இரு அணியினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பலர் விவாதித்து வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தனித்து 370 இடங்களுக்கு அதிகமாக வெல்லும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    2019ல் பா.ஜ.க. கண்ட வெற்றியை மீண்டும் அக்கட்சி பெறுவது கடினம்.

    2019 தேர்தலிலேயே பல மாநிலங்களில் அக்கட்சி வெல்லக் கூடிய அனைத்து இடங்களையும் கைப்பற்றி விட்டது.

    இனி ஏற்றம் இருக்காது; இறங்குமுகம்தான். அக்கட்சியின் வீழ்ச்சி எதிர் அணியினர் காட்ட போகும் வேகத்தை பொறுத்தே இருக்கும்.

    2019ல் அரியானா, ராஜஸ்தான், ம.பி., கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிகமாக வென்றது. அங்கெல்லாம் அவர்கள் அடைய வேண்டிய உச்சத்தை அடைந்து விட்டார்கள்.

    இதே எண்ணிக்கையில் அவர்களால் மீண்டும் வெற்றி பெற இயலாது.

    இம்முறை பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கலாமே தவிர, தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை.

    வெற்றி பெற்று விடுவோம் எனும் பா.ஜ.க.வின் இறுமாப்பே எதிர் அணியினருக்கு பலம்.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    Next Story
    ×