search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்கும் ஆம் ஆத்மி.. காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை
    X

    எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்கும் ஆம் ஆத்மி.. காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை

    • அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட முயற்சி மேற்கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
    • காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கும் நிலையில், டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை அணுகி, அவசரச் சட்டத்திற்கு எதிராக அவர்களின் ஆதரவைத் திரட்டவும், இந்த அவசர சட்டத்தை பாராளுமன்றம் வழியாக சட்டமாக்கப்படுவதை தடுக்கவும் அர்விந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த சட்டம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், 'டெல்லியின் நிர்வாக சேவைகள் குறித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான எங்களின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்றால், நாளை பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்போம்' என ஆம் ஆத்மி கட்சி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாளைய கூட்டத்தின்போது காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதுவரை காங்கிரஸ் எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காததால், ஆம் ஆத்மி கட்சி இறுதி எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×