search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்: 4 குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த தாய்
    X

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் வெறிச்செயல்: 4 குழந்தைகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த தாய்

    • சிறுமி மஞ்சுளாவின் உடலை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா.

    தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை).

    கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரபண்டா மனைவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த லலிதா நேற்று காலை பிஜன பள்ளி போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லலிதா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றார். பின்னர் கல்வ குர்தி என்ற இடத்தில் செல்லும் பாசன கால்வாய் சென்றார்.

    அங்கு தனது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் தள்ளினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மட்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    லலிதா அங்கிருந்து தப்பிச் சென்றார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பாசன கால்வாயில் இருந்து மருகொண்டா மகாலட்சுமி, சரிதா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். சிறுமி மஞ்சுளாவின் பிணத்தை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×