என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் - பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்
Byமாலை மலர்5 April 2020 6:49 PM GMT (Updated: 5 April 2020 6:49 PM GMT)
பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் என பா.ஜனதா எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.
மைசூரு:
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமரின் அறிவிப்பில் எந்த அறிவியல் காரணங்களும் இல்லை. மக்களின் ஒற்றுமையை விளக்குவதற்கு இந்த வேண்டுகோள் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், பிரதமரின் அறிவிப்புக்கு பின்னணியில் சிலர் அறிவியல் காரணங்களை உருவாக்கிவருகின்றனர்.
இந்தநிலையில், கர்நாடாக மாநிலம் மைசூரு தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ ராம்தாஸ பேசும் போது
மோடியின் வேண்டுகோளின்படி மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றவேண்டும். மெழுகுவர்த்தி உருவாக்கும் வெப்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் செத்துவிடும். என்னுடைய கணிப்பு அறிவியல்பூர்வமானது’என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமரின் அறிவிப்பில் எந்த அறிவியல் காரணங்களும் இல்லை. மக்களின் ஒற்றுமையை விளக்குவதற்கு இந்த வேண்டுகோள் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், பிரதமரின் அறிவிப்புக்கு பின்னணியில் சிலர் அறிவியல் காரணங்களை உருவாக்கிவருகின்றனர்.
இந்தநிலையில், கர்நாடாக மாநிலம் மைசூரு தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ ராம்தாஸ பேசும் போது
மோடியின் வேண்டுகோளின்படி மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றவேண்டும். மெழுகுவர்த்தி உருவாக்கும் வெப்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் செத்துவிடும். என்னுடைய கணிப்பு அறிவியல்பூர்வமானது’என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X