என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதா? - பாராளுமன்றத்தில் சோனியா ஆவேசம்
Byமாலை மலர்2 July 2019 10:35 AM GMT (Updated: 2 July 2019 12:32 PM GMT)
பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயம் ஆக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் சோனியா காந்தி காரசாரமாக பேசினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி நகரில் உள்ள அதிநவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட ரெயில்வே துறையை சேர்ந்த 6 அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காரசாரமாக உரையாற்றினார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் அனைத்தையும் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் முதல்படியாகும். இந்த நாட்டின் சொத்துகளை எல்லாம் ஒருசில தனிநபர்களுக்கு மலிவான விலையில் இந்த அரசு விற்றுவிடப் பார்க்கிறது என்று குற்றம்சாட்டிய சோனியா காந்தி, இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு முன்னோடியாக ஏராளமான பணத்தை முதலீடு செய்து ரேபரேலியில் உள்ள அதிநவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இன்று மிகக்குறைந்த செலவில் தரமான ரெயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.
சுமார் 2 ஆயிரம் பேர் இங்கு பணியாற்றுகிறார்கள். இதை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்தது ஏன்? என்பது புரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் மக்களின் நலம்சார்ந்ததாகதான் இருக்க வேண்டும். முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக இருக்க கூடாது என்றார்.
எச்.ஏ.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இன்று தள்ளாட்டத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய சோனியா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பொதுத்துறை நிறுவனங்களை நவீன இந்தியாவின் கோவில்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று இந்த கோவில்களை ஆபத்து சூழ்ந்திருப்பதை பார்க்கும்போது கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X