என் மலர்
செய்திகள்

காங்கிரஸ் தோல்விக்கு ஓட்டுப்பதிவு எந்திரம் காரணமா?- பூத் வாரியாக ஆராய ராகுல் முடிவு
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு தொடர்பாக பூத் வாரியாக ஆய்வு செய்ய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீர்மானித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் 421 இடங்களில் போட்டியிட்டு வெறும் 52 இடங்களில் மட்டுமே ராகுல் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் மாநில கட்சிகளின் துணையுடன் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற ராகுலின் கனவு தகர்ந்து போனது. அது மட்டுமின்றி பாராளுமன்றத்தில் 10 சதவீதம் இடங்களைப் பெறாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.
சுமார் 3 மாதங்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தும் 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 44 இடங்களை விட இந்த தடவை கூடுதலாக 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது என்பதால் ராகுல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். தேர்தல் தோல்வியால் மிகவும் விரக்தி அடைந்த அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோழமை கட்சிகளின் தலைவர்களும் சமரசம் செய்ததைத் தொடர்ந்து அவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் போட்டியிட்ட 421 தொகுதிகளில் 369 தொகுதிகளில் தோல்வி அடைந்ததோடு பல தொகுதிகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது. பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் வாக்குகள் வித்தியாசம் மிக, மிக அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் பூத் வாரியாகவும் காங்கிரசுக்கு வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்லை என்பதை ராகுல் உணர்ந்துள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பகுதி பூத் கமிட்டிகளில் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டால்தான், காங்கிரஸ் கட்சியை முன்பு போல அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ராகுல் வந்துள்ளார். எனவே பூத் கமிட்டி வாரியாக காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 421 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ராகுல் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த உத்தரவில், “நீங்கள் ஒவ்வொரு பூத்திலும் பெற்ற வாக்குகள் விபரங்கள் கொண்ட படிவம்-20 பட்டியலை தேர்தல் ஆணையம் உங்களுக்கு கொடுத்திருக்கும். அந்த படிவம்-20 பட்டியலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ஜூன் 7-ந்தேதிக்குள் அனுப்பி வையுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுக்கு பூத் வாரியாக கிடைத்த வாக்கு விவர பட்டியலை அனுப்பி வருகிறார்கள்.
அந்த பட்டியலை வைத்து காங்கிரஸ் தலைமையிடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, எங்கெங்கு காங்கிரசுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது என்ற அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர ராகுல் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரசின் தோல்விக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நடந்த தில்லு முல்லும் ஒரு காரணமாகும் என்று காங்கிரசில் ஒருசாரார் கூறி வருகிறார்கள். ஆனால் காங்கிரசில் மற்றொரு சாரார், மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்து இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். என்றாலும் பூத் வாரியான ஓட்டுகளை மின்னணு எந்திர முடிவுகளுடன் மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
பூத் வாரியாக கிடைத்த வாக்குகளை மீண்டும் சரி பார்ப்பதன் மூலம் மின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு நடந்துள்ளதா? என்பதை உறுதிபடுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கருதுகிறார்கள். இதனால் பூத் வாரியாக வாக்குப்பதிவை ஆய்வு செய்யும் காங்கிரசின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் 421 இடங்களில் போட்டியிட்டு வெறும் 52 இடங்களில் மட்டுமே ராகுல் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் மாநில கட்சிகளின் துணையுடன் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற ராகுலின் கனவு தகர்ந்து போனது. அது மட்டுமின்றி பாராளுமன்றத்தில் 10 சதவீதம் இடங்களைப் பெறாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.
சுமார் 3 மாதங்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தும் 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 44 இடங்களை விட இந்த தடவை கூடுதலாக 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது என்பதால் ராகுல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார். தேர்தல் தோல்வியால் மிகவும் விரக்தி அடைந்த அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தோழமை கட்சிகளின் தலைவர்களும் சமரசம் செய்ததைத் தொடர்ந்து அவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி 17 மாநிலங்களில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள நிலையில் அந்த மூன்று மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் தோற்று இருப்பது ராகுலுக்கு புரியாத புதிராக உள்ளது. எனவே இவற்றுக்கெல்லாம் விடை காண வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளார்.

ஒவ்வொரு தொகுதியிலும் எந்தெந்த பகுதி பூத் கமிட்டிகளில் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டால்தான், காங்கிரஸ் கட்சியை முன்பு போல அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு ராகுல் வந்துள்ளார். எனவே பூத் கமிட்டி வாரியாக காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 421 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ராகுல் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த உத்தரவில், “நீங்கள் ஒவ்வொரு பூத்திலும் பெற்ற வாக்குகள் விபரங்கள் கொண்ட படிவம்-20 பட்டியலை தேர்தல் ஆணையம் உங்களுக்கு கொடுத்திருக்கும். அந்த படிவம்-20 பட்டியலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ஜூன் 7-ந்தேதிக்குள் அனுப்பி வையுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களுக்கு பூத் வாரியாக கிடைத்த வாக்கு விவர பட்டியலை அனுப்பி வருகிறார்கள்.
அந்த பட்டியலை வைத்து காங்கிரஸ் தலைமையிடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, எங்கெங்கு காங்கிரசுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது என்ற அறிக்கை தயார் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகத்திலும், செயல்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வர ராகுல் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரசின் தோல்விக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நடந்த தில்லு முல்லும் ஒரு காரணமாகும் என்று காங்கிரசில் ஒருசாரார் கூறி வருகிறார்கள். ஆனால் காங்கிரசில் மற்றொரு சாரார், மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்து இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். என்றாலும் பூத் வாரியான ஓட்டுகளை மின்னணு எந்திர முடிவுகளுடன் மீண்டும் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளனர்.
பூத் வாரியாக கிடைத்த வாக்குகளை மீண்டும் சரி பார்ப்பதன் மூலம் மின்னணு எந்திரங்களில் தில்லு முல்லு நடந்துள்ளதா? என்பதை உறுதிபடுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கருதுகிறார்கள். இதனால் பூத் வாரியாக வாக்குப்பதிவை ஆய்வு செய்யும் காங்கிரசின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Next Story






