என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு தடுமாறும் நேரங்களில் ஆக்கபூர்வமான அறிவுரைகளை ஆர்.எஸ்.எஸ். வழங்கும்- மோகன் பகவத் உறுதி
Byமாலை மலர்2 Jun 2019 8:29 PM GMT (Updated: 2 Jun 2019 8:29 PM GMT)
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
கான்பூர்:
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மகத்தான அதிகாரத்தை பெற்றிருக்கின்றன. அதற்காக அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. அரசு எந்த நேரத்தில் தடுமாறினாலும், அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆக்கபூர்வமான அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கும்’ என்று தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மற்றொரு கூட்டத்தில் மோகன் பகவத் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும்போது, சமூகத்தில் சமத்துவத்தை கொண்டு வருமாறும், கல்வியறிவின்மை, போதைப்பொருள், குடிப்பழக்கம் போன்ற சமூக தீமைகளை அகற்றுமாறும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை கேட்டுக்கொண்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஆணவத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X