என் மலர்
செய்திகள்

நாடு முழுவதும் பிரியங்கா பிரசாரம் - காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்காவின் சூறாவளி சுற்றுப்பயணத் திட்டத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 ஊர்களில் அவர் பிரசாரம் செய்வார் என தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #PriyankaGandhi
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவின் வருகை தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உருவாக்கி வருகிறது. பிரியங்கா “இன்னொரு இந்திராகாந்தி” என்ற எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் கட்சியினர் கருதுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மோடி அலை காரணமாக சோனியா, ராகுல் இருவரது பிரசாரமும் எடுபடாமல் போனது. அந்த சமயத்திலேயே பிரியங்கா வந்தால்தான் இனி காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ராகுலின் பேச்சு மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அனைவரது எதிர்பார்ப்பும் பிரியங்கா மீதே இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஜனவரி மாதம் பிரியங்கா தீவிர அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். எடுத்த உடனேயே அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளின் பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். கடந்த மாதம் அவர் இந்த தொகுதிகளில் கங்கை ஆற்றில் படகு பயணம் நடத்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரியங்காவின் படகு பயணம் காரணமாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் கடும் உற்சாகம் பிறந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்ற முன்வந்துள்ள தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணிக்கையும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பிரியங்காவின் வருகை காங்கிரஸ் வெற்றிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அமைந்துள்ளது.

என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து தினமும் பிரியங்காவை அழைத்தபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரசாரம் செய்ய பிரியங்கா தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்காவின் பெயர் முதன்மை இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் பிரியங்கா பிரசாரம் செய்வது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக அவர் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஒடிசா, காஷ்மீர், மேற்குவங்காளம் உள்பட 16 மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது நாடு தழுவிய சூறாவளி சுற்றுப்பயணம் விவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அவர் எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது தெரிய வரும்.
பிரியங்காவின் சூறாவளி சுற்றுப்பயணத் திட்டத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 ஊர்களில் பிரியங்காவின் பிரசாரம் நடைபெறும் என்று தெரிகிறது. பிரியங்காவை தங்கள் தொகுதிக்கு அழைக்க தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
பிரதமர் மோடி பிரசாரம் செய்துள்ள நகரங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. #LokSabhaElections2019 #PriyankaGandhi
காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவின் வருகை தொண்டர்கள் மத்தியில் புதிய எழுச்சியை உருவாக்கி வருகிறது. பிரியங்கா “இன்னொரு இந்திராகாந்தி” என்ற எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் கட்சியினர் கருதுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மோடி அலை காரணமாக சோனியா, ராகுல் இருவரது பிரசாரமும் எடுபடாமல் போனது. அந்த சமயத்திலேயே பிரியங்கா வந்தால்தான் இனி காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முடியும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ராகுலின் பேச்சு மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அனைவரது எதிர்பார்ப்பும் பிரியங்கா மீதே இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஜனவரி மாதம் பிரியங்கா தீவிர அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். எடுத்த உடனேயே அவர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் உள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளின் பொறுப்பு பிரியங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். கடந்த மாதம் அவர் இந்த தொகுதிகளில் கங்கை ஆற்றில் படகு பயணம் நடத்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரியங்காவின் படகு பயணம் காரணமாக உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் கடும் உற்சாகம் பிறந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்ற முன்வந்துள்ள தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணிக்கையும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பிரியங்காவின் வருகை காங்கிரஸ் வெற்றிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அமைந்துள்ளது.
இதையடுத்து பிரியங்காவை தங்கள் மாநிலத்துக்கும் வந்து பிரசாரம் செய்யும்படி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி போட்டு அழைத்து வருகிறார்கள். முதலில் பிரியங்கா அதை ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதே தனது முதல் இலக்கு என்று தெரிவித்தார்.

என்றாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து தினமும் பிரியங்காவை அழைத்தபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரசாரம் செய்ய பிரியங்கா தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் பிரியங்காவின் பெயர் முதன்மை இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் பிரியங்கா பிரசாரம் செய்வது உறுதியாகி விட்டது. முதல் கட்டமாக அவர் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஒடிசா, காஷ்மீர், மேற்குவங்காளம் உள்பட 16 மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது நாடு தழுவிய சூறாவளி சுற்றுப்பயணம் விவரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அவர் எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது தெரிய வரும்.
பிரியங்காவின் சூறாவளி சுற்றுப்பயணத் திட்டத்தில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 ஊர்களில் பிரியங்காவின் பிரசாரம் நடைபெறும் என்று தெரிகிறது. பிரியங்காவை தங்கள் தொகுதிக்கு அழைக்க தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
பிரதமர் மோடி பிரசாரம் செய்துள்ள நகரங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் பிரியங்கா பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. #LokSabhaElections2019 #PriyankaGandhi
Next Story






