என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
    X

    பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

    பாரதிய ஜனதா சார்பில் இந்தூரில் நடைபெற்ற மோடியின் ‘நான் ஒரு காவலன்’ என்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கேற்கவில்லை. #LokSabhaElections2019 #BJP #SumitraMahajan
    போபால்:

    பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.

    அவர் 8 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்துஎம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

    ஆனால் இந்த தடவை அவருக்கு பாரதிய ஜனதாவில் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. சுமித்ரா மகாஜனுக்கு தற்போது 75 வயதாகிறது. வயதை காரணம் காட்டி அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கும் டிக்கெட் வழங்கவில்லை. அந்த வரிசையில் சுமித்ரா மகாஜனையும் சேர்த்து விட்டனர்.

    டிக்கெட் வழங்காததால் சுமித்ரா மகாஜன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். பாரதிய ஜனதா சார்பில் இந்தூரில் மோடியின் ‘நான் ஒரு காவலன்’ என்ற நிகழ்ச்சி நடந்தது.



    பொதுவாக இந்தூரில் எந்த விழா நடந்தாலும் சுமித்ரா மகாஜன் பங்கேற்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அவர் ஊரில் இருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மகேந்திர ஹரிதா, ஆகாஷ் விஜய் மற்றும் பல ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

    சுமித்ரா மகாஜன் கலந்து கொள்ளாததால் அவர் கட்சியில் அதிருப்தியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

    கட்சியில் டிக்கெட் கொடுக்கப்படாவிட்டாலும் சுமித்ரா மகாஜனுக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட்டன என்று மூத்த தலைவர்கள் கூறினர். #LokSabhaElections2019 #BJP #SumitraMahajan
    Next Story
    ×