என் மலர்
செய்திகள்

X
சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா
சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அனுபவம் பற்றி பிந்து, கனகதுர்கா பேட்டி
By
மாலை மலர்4 Jan 2019 3:12 PM IST (Updated: 4 Jan 2019 3:12 PM IST)

கடும் எதிர்ப்புக்கிடையில் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக பிந்து, கனகதுர்கா பேட்டி அளித்துள்ளனர். #SabarimalaTemple
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்தனர்.
இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். 2-வது முறையாக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இவர்கள் முதலில் சபரிமலை சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியபோது தலைமறைவாகி விட்டனர். அப்போது அவர்கள் மாயமாகிவிட்டது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. ஆனால் அந்த பெண்கள் 2 பேரும் எங்கே சென்றனர் என்ற மர்மம் தற்போது விலகி உள்ளது.
பிந்துவும், கனகதுர்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்து உள்ளனர். அந்த லாட்ஜ் உரிமையாளருக்கு முதலில் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வந்த பிறகு தான் அதை பார்த்து லாட்ஜ் உரிமையாளர், பிந்துவும், கனகதுர்காவும் தங்கள் லாட்ஜில் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டுள்ளார்.
அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பிந்து, கனகதுர்கா அறையை பதிவு செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தற்போது கனகதுர்காவும், பிந்துவும் கொச்சியில் உள்ள போலீஸ் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் பிந்து கூறியதாவது:-
நாங்கள் ஆம்புலன்சில் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறுவது தவறு. பக்தர்களோடு, பக்தர்களாக நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்தோம். இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதும் தவறு. எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை.
பா.ஜனதா நடத்திய மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அதனால் என்னை பா.ஜனதாவைச் சேர்ந்தவர் என்று கூற முடியுமா? அதேபோல சபரிமலைக்கு சென்றதால் நான் கம்யூனிஸ்டும் கிடையாது. கம்யூனிஸ்டு என்றாலும் அவர்கள் பக்தர்களாக இருக்கக்கூடாதா?. நான் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன். ஆனால் 8 ஆண்டுகளாக அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
கடந்த 24-ந் தேதி சபரிமலை சென்றபோது எங்களால் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்த பிறகு தான் வீடு திரும்ப வேண்டும் என்ற உறுதியோடு உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் மாறி, மாறி வசித்தோம். போலீசார் வற்புறுத்தி எங்களை அழைத்து செல்லவில்லை. நாங்கள் தான் போலீசின் உதவியை நாடினோமே தவிர அவர்கள் எங்களை நாடவில்லை. பம்பை சென்று போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். போலீசார் பாதுகாப்பு வழங்கினார்கள். தற்போது ஊரில் போராட்டம் நடப்பதால் ஒதுங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் சபரிமலை சென்றேன். இதில் எந்த வற்புறுத்தலும் கிடையாது. பிந்துவுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. இதனால் அவருடன் சேர்ந்து சென்று சாமி தரிசனம் செய்தேன். நான் கணவர், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நான் சபரிமலை செல்வதில் விருப்பம் இல்லை. எனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் சபரிமலை சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaTemple
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்தனர்.
இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். 2-வது முறையாக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இவர்கள் முதலில் சபரிமலை சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியபோது தலைமறைவாகி விட்டனர். அப்போது அவர்கள் மாயமாகிவிட்டது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. ஆனால் அந்த பெண்கள் 2 பேரும் எங்கே சென்றனர் என்ற மர்மம் தற்போது விலகி உள்ளது.
பிந்துவும், கனகதுர்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்து உள்ளனர். அந்த லாட்ஜ் உரிமையாளருக்கு முதலில் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வந்த பிறகு தான் அதை பார்த்து லாட்ஜ் உரிமையாளர், பிந்துவும், கனகதுர்காவும் தங்கள் லாட்ஜில் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டுள்ளார்.
அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பிந்து, கனகதுர்கா அறையை பதிவு செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தற்போது கனகதுர்காவும், பிந்துவும் கொச்சியில் உள்ள போலீஸ் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் பிந்து கூறியதாவது:-
நாங்கள் ஆம்புலன்சில் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறுவது தவறு. பக்தர்களோடு, பக்தர்களாக நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்தோம். இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதும் தவறு. எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை.
பா.ஜனதா நடத்திய மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அதனால் என்னை பா.ஜனதாவைச் சேர்ந்தவர் என்று கூற முடியுமா? அதேபோல சபரிமலைக்கு சென்றதால் நான் கம்யூனிஸ்டும் கிடையாது. கம்யூனிஸ்டு என்றாலும் அவர்கள் பக்தர்களாக இருக்கக்கூடாதா?. நான் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன். ஆனால் 8 ஆண்டுகளாக அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
கடந்த 24-ந் தேதி சபரிமலை சென்றபோது எங்களால் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்த பிறகு தான் வீடு திரும்ப வேண்டும் என்ற உறுதியோடு உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் மாறி, மாறி வசித்தோம். போலீசார் வற்புறுத்தி எங்களை அழைத்து செல்லவில்லை. நாங்கள் தான் போலீசின் உதவியை நாடினோமே தவிர அவர்கள் எங்களை நாடவில்லை. பம்பை சென்று போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். போலீசார் பாதுகாப்பு வழங்கினார்கள். தற்போது ஊரில் போராட்டம் நடப்பதால் ஒதுங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் சபரிமலை சென்றேன். இதில் எந்த வற்புறுத்தலும் கிடையாது. பிந்துவுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. இதனால் அவருடன் சேர்ந்து சென்று சாமி தரிசனம் செய்தேன். நான் கணவர், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நான் சபரிமலை செல்வதில் விருப்பம் இல்லை. எனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் சபரிமலை சென்றேன்.
இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaTemple
Next Story
×
X