என் மலர்
செய்திகள்

நேர்மையான பிரதமர் என்பது உள்பட வாக்குறுதிகள் அனைத்தையும் தகர்த்துவிட்டார் மோடி - ராகுல்காந்தி தாக்கு
நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் மோடி தகர்த்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #NarendraModi #RahulGandhi
ஐதராபாத்:
டிசம்பர் 7-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாணவர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் பலப்பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவைகளை நிறைவேற்றவில்லை.

பிரதமர் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகள் அளித்தார். தான் இந்த நாட்டின் ‘காவலாளி’ பிரதம மந்திரி அல்ல என்றும் கூறினார். நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டார்.
பிரதமர் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பணக்காரர்கள் 15 பேரின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார். இந்திய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அவர் தயாரா?
எல்லோரையும் ஒரே மாதிரி கவனிக்கும்படி தான் கூறுகிறோம். பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #NarendraModi #RahulGandhi
டிசம்பர் 7-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மாணவர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவும் பலப்பல வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அவைகளை நிறைவேற்றவில்லை.

பிரதமர் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகள் அளித்தார். தான் இந்த நாட்டின் ‘காவலாளி’ பிரதம மந்திரி அல்ல என்றும் கூறினார். நேர்மையான பிரதமர் என்பது உள்பட அனைத்து வாக்குறுதிகளையும் தகர்த்துவிட்டார்.
பிரதமர் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி வழங்குகிறார். ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவின் பணக்காரர்கள் 15 பேரின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார். இந்திய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அவர் தயாரா?
எல்லோரையும் ஒரே மாதிரி கவனிக்கும்படி தான் கூறுகிறோம். பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #NarendraModi #RahulGandhi
Next Story






