search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை
    X

    ஜம்மு காஷ்மீரில் துணிகரம் - பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவதிகள் சிலர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ரக் இ லிட்டர் பகுதியில் வசித்து வந்தவர் ஷபிர் அகமது பட். பாஜக பிரமுகரான இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இவரது வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் ஷபிர் அகமதை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அகமது பட் பரிதாபமாக உயிரிழந்தார்.



    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷபிர் அகமதுவின் உடலை மீட்டு இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரளுகின்றனர். #JammuKashmir

    Next Story
    ×