என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ஒருவரை கடத்தி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்
Byமாலை மலர்13 Aug 2018 4:57 AM GMT (Updated: 13 Aug 2018 4:57 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள், அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் முர்ரன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த குலசார் அகமது பட் என்பவரை கடத்திச் சென்றனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை போலீஸ், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் முர்ரன் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த குலசார் அகமது பட் என்பவரை கடத்திச் சென்றனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் அருகில் உள்ள வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தெற்கு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை போலீஸ், துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 6 பேரை பயங்கரவாதிகள் கடத்தி கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #JKMilitants #JKCivilionShotDead
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X