என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தலாக் மசோதா இன்று தாக்கல் இல்லை - தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
Byமாலை மலர்10 Aug 2018 10:24 AM GMT (Updated: 10 Aug 2018 10:24 AM GMT)
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் தாக்கல் செய்யப்படவில்லை. #MonsoonSession #TripleTalaqBill
புதுடெல்லி:
முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத் தொடரை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பதால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று தாக்கல் செய்யப்படவில்லை என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிவதால், அடுத்து நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடரில்தான் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். #MonsoonSession #TripleTalaqBill
முத்தலாக் சட்டமசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இதையடுத்து முத்தலாக் மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் இன்றும் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டத் தொடரை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பதால், முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று தாக்கல் செய்யப்படவில்லை என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிவதால், அடுத்து நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடரில்தான் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். #MonsoonSession #TripleTalaqBill
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X