search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கையில்லா தீர்மான அச்சுறுத்தல் - தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
    X

    நம்பிக்கையில்லா தீர்மான அச்சுறுத்தல் - தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

    பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியுள்ளன. #MansoonSession #TeluguDesam #NDA
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இன்னும், மூன்று கூட்டத்தொடர்கள் மட்டுமே மீதம் இருப்பதால் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருகிறது. இன்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், அவை சுமுகமாக நடக்க எம்.பி.க்கள் உதவ வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், நாளை தீர்மானத்தை கொண்டு வர அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தருவோம் என ஆர்.ஜே.டி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

    நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அபாயம் இல்லை என்றாலும், இது தொடர்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில், ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டால் எப்படி முறியடிப்பது என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

    Next Story
    ×