search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை
    X

    திருப்பதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை

    திருப்பதியில் நீட் தேர்வில் தோல்விடைந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதி கொர்லகுண்டா பகுதியில் வசித்து வரும் சுப்ரமணியம், வனஜாகுமாரி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சுப்ரமணியம் இறந்த பின் அவரது மூத்த மகன் தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இளைய மகன் பாலாஜி (வயது 20) பிளஸ்2 வகுப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை எழுதினார்.

    ஆனால், தொடர் தோல்வியையே சந்தித்தார். இதனால் மன வருத்தமடைந்த அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×