search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி., பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் தொடர் மழைக்கு 57 பேர் பலி
    X

    உ.பி., பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் தொடர் மழைக்கு 57 பேர் பலி

    பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை சார்ந்த விபத்துகளில் 57 பேர் உயிரிழந்தனர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரமாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதனால், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்தில் உன்னாவ் மாவட்டத்தில் 6 பேர், ரேபரேலி, கோன்டா, பஹ்ராய்ச், கான்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் மற்றும் பாரபங்கி மாவட்டத்தில் ஒருவர் என மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதேபோல், பீகார் மாநிலத்தில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த பெருமழைக்கு 19 பேர் பலியாகினர். ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 48 மணிநேரமாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கி 23 பேர் உயிரிழந்தனர். #tamilnews
    Next Story
    ×