என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி - எடியூரப்பா குற்றச்சாட்டு
Byமாலை மலர்15 May 2018 11:11 AM GMT (Updated: 15 May 2018 11:11 AM GMT)
கர்நாடக தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்கே ஆதரவு அளித்திருப்பதாகவும், பின்வாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார். . #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #Yeddyurappa
பெங்களூரு:
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை முடிவுகள் வெளியான தொகுதிகளில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டிக்கான வாய்ப்பு மங்கி வரும் நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மக்கள் எங்களுக்குத்தான் முழு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் கட்சி பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. காங்கிரசின் இந்த செயல்பாட்டை கண்டிக்கிறோம்.
ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரசின் தோல்விக்கு காரணம். சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துள்ளார்.
பா.ஜ.க.வின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #Yeddyurappa
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை முடிவுகள் வெளியான தொகுதிகளில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டிக்கான வாய்ப்பு மங்கி வரும் நிலையில், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மக்கள் எங்களுக்குத்தான் முழு ஆதரவு அளித்துள்ளனர். மக்கள் அளித்த தீர்ப்புக்கு மாறாக காங்கிரஸ் கட்சி பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. காங்கிரசின் இந்த செயல்பாட்டை கண்டிக்கிறோம்.
ஆளுவோருக்கு எதிரான மனநிலையே காங்கிரசின் தோல்விக்கு காரணம். சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வி அடைந்துள்ளார்.
பா.ஜ.க.வின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElectionResult2018 #KarnatakaVerdict #Yeddyurappa
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X