என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டன் செல்லும் டெல்லி மாணவிக்கு விசா வழங்க நடவடிக்கை - சுஷ்மா உறுதி
Byமாலை மலர்30 April 2018 11:33 PM GMT (Updated: 30 April 2018 11:33 PM GMT)
பிரிட்டனில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பங்கேற்க செல்லும் டெல்லி மாணவிக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரிட்டனில் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள டெல்லி சங்கம் விஹார் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த இஷா (14) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதையடுத்து, மே 3-ம் தேதி மாணவி பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்வதற்கு வேண்டிய டிக்கெட்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டன் செல்ல தேவையான விசாவுக்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, மாணவியின் சார்பில் அர்பிதா திவாரி என்பவர் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு டுவிட்டரில் தகவல் கொடுத்தார்.
இதற்கு பதிலளித்த சுஷ்மா, நிச்சயம் உதவுகிறேன். இதுதொடர்பாக எங்கள் அமைச்சக அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என பதில் அளித்தார்.
மேலும், விபத்தில் சிக்கி குவைத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் சகோதரர் இந்தியா திரும்பி வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X