என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சலில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய 8 சீக்கியர்கள் விபத்தில் பலி
Byமாலை மலர்2 March 2018 9:06 AM GMT (Updated: 2 March 2018 9:06 AM GMT)
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சீக்கிய கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 சீக்கியர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
சிம்லா:
இமாச்சலப்பிரதேசம் மாநிலம் குலு மாவட்டத்தில் மனிகாரன் பகுதியில் சீக்கிய புனித தலம் ஒன்று உள்ளது. இங்கு ஸ்வார்காத் பகுதியைச் சேர்ந்த 8 சீக்கியர்கள் வழிபாடு நடத்திவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சண்டிகர் - மனாலி தேசிய நெடுஞ்சாலையில் குன்புர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து விலகி அருகிலிருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான காரை மீட்கும் பணி நடந்து வருவதாகம் போலீசார் கூறியுள்ளனர். கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலையில் கார் நழுவி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X