search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    X

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மாவட்டத்தில் உள்ள பாஹெர்போரா பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

    சில மணி நேரங்கள் நீடித்த சண்டையில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு வீரர் காயமடைந்துள்ளதாகவும், என்கவுண்டர் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×