search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்டர் நடக்கலாம்: ஐ.ஜி. காந்தாராவ் எச்சரிக்கை
    X

    திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்டர் நடக்கலாம்: ஐ.ஜி. காந்தாராவ் எச்சரிக்கை

    திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்கள் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் என்கவுன்டர் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருப்பதி:

    திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாக்ராப்பேட்டையை அடுத்த ஜருடுபண்டா என்ற இடத்தில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை கடத்தி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் கற்களை எடுத்து வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓட முயன்றனர்.




    செம்மரக்கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் பாலகிருஷ்ணா.


    இதில் பாலகிருஷ்ணா என்ற போலீஸ்காரருக்கு கையிலும், தலையிலும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு, செம்மரக்கடத்தல்காரர்களை சரண் அடையும் படி எச்சரித்தனர். ஆனால், செம்மரக்கடத்தல்காரர்கள் தப்பித்து நாலாபுறமும் சிதறி ஓடி விட்டனர்.

    அதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை, போலீசார் கைது செய்தனர். கைதான வர், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

    செம்மரக்கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 13 செம்மரக்கட்டைகள், 6 கோடாரி, மரம் அறுக்கும் ஒரு வாள், அரிவாள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    சம்பவ இடத்தை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாக்ராப்பேட்டை அருகே செம்மரங்களை வெட்டிய கும்பலை சரண் அடையும்படி அதிரடிப்படை போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்தது மட்டுமின்றி கத்தி, கோடாரியால் அதிரடிப் படையினரை தாக்க தொடங்கினர்.

    இதில் ஒரு வீரர் காயமடைந்ததார். அதன் பின்னர், தற்காப்புக்காக அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் கடத்தல் கும்பல் மரங்களை போட்டு விட்டு தப்பி ஓடியது. இதில் ஒருவர் பிடிபட்டார்.

    இதே நிலை தொடர்ந்தால் வேறு வழியின்றி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் மீண்டும் என்கவுன்டர் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு ஐ.ஜி. காந்தாராவ் கூறினார்.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். தனித்தனியாக 4 பேர் என மொத்தம் 24 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செம்மரம் கடத்த கடத்தல் கும்பல் அதிக பணம் கொடுப்பதாகவும், போலீஸ் நடவடிக்கையில் ஒரு வேளை உயிரிழந்தால் குடும்பத்துக்கு பெருந்தொகை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஏழைகள் சிலர் செம்மரம் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.


    Next Story
    ×