என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Byமாலை மலர்30 Oct 2017 6:50 AM GMT (Updated: 30 Oct 2017 6:50 AM GMT)
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருங்காட்டியகத்தை சேர்ந்தவர் விஜயகுமாரின் மகன் அகில் (வயது 29). இவருக்கு இன்று காலை திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உறவினர்களும் பரிசு பொருட்களுடன் வாயாற வாழ்த்த மண்டபத்தில் கூடினர். வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு திருமண வீடு விழா கோலம்பூண்டது. குழந்தைகள் ஓடியாடி மகிழ்ந்தனர். பெண் வீட்டாரும் மண்டபத்திற்கு வர தயாரானார்கள்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமண வீடுகளை இழந்து சோகத்தில் மூழ்கியது. இது குறித்து மாப்பிள்ளையின் தாய் ஷீபா அருங்காட்சியம் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் அகில் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருங்காட்டியகத்தை சேர்ந்தவர் விஜயகுமாரின் மகன் அகில் (வயது 29). இவருக்கு இன்று காலை திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உறவினர்களும் பரிசு பொருட்களுடன் வாயாற வாழ்த்த மண்டபத்தில் கூடினர். வாழை மரம், தோரணங்கள் கட்டப்பட்டு திருமண வீடு விழா கோலம்பூண்டது. குழந்தைகள் ஓடியாடி மகிழ்ந்தனர். பெண் வீட்டாரும் மண்டபத்திற்கு வர தயாரானார்கள்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமண வீடுகளை இழந்து சோகத்தில் மூழ்கியது. இது குறித்து மாப்பிள்ளையின் தாய் ஷீபா அருங்காட்சியம் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் அகில் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X