search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டுக்கறியால் வாலிபர் கொலை: பா.ஜ.க. தலைவர் உள்பட 2 பேர் கைது
    X

    மாட்டுக்கறியால் வாலிபர் கொலை: பா.ஜ.க. தலைவர் உள்பட 2 பேர் கைது

    ரயிலில் மாட்டுக்கறி கொண்டு சென்ற வாலிபர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர் உள்பட 2 பேரை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்தனர்.
    பாட்னா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 29-ந்தேதி மாட்டுக்கறி கொண்டு சென்ற அலிமுதீன் அஸ்கர் அன்சாரி என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்ததால் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    அன்சாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில ராம்கர் பகுதியை சேர்ந்த பா.ஜனதா ஊடக பொறுப்பாளர் நித்யானந்த் மகதோ, சந்தோஷ்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்கனவே இது தொடர்பாக ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்திருந்தார்.
    Next Story
    ×