search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி
    X

    எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்கும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்னகாதி செக்டார் அருகே இன்று காலை சுமார் 7.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக குண்டுகளால் இந்திய கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

    அதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷேரா பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி மோட்டார் குண்டுகளால் 
    தாக்கினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினரின் சார்பில் தகுந்த பதிலடி 

    கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. சேத விபரங்கள் இன்னும் தெரியவில்லை. கடந்த மாதத்தில் பெரும்பாலான நாட்களில் இதே போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திவந்தனர் என்பது 

    குறிப்பிடத்தக்கது. உச்சகட்டமாக இந்திய வீரர்கள் இருவர்களை கொன்று உடலை சிதைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×