என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் விசாரணை
Byமாலை மலர்1 May 2017 11:57 AM GMT (Updated: 1 May 2017 11:57 AM GMT)
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானார்.
இதேபோல் மற்றொரு குற்றவாளியான சயனும், மனைவி, மகளுடன் காரில் சென்ற போது கேரள மாநிலம் பாலக்காடு அருகே கண்ணடி என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி வினுபிரியா, நீனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சயனை மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
சயனின் காரின் போலி நம்பர் பிளேட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விபத்து ஏதேச்சையாக நடந்ததா? கண்டெய்னர் லாரி பின்பக்கமாக கார் மோதியதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்தனர்.
மேலும் கண்டெய்னர் டிரைவரான ஆந்திராவை சேர்ந்த கிரணிடம் கேரள போலீசார் விசாரித்தனர்.
கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானார்.
இதேபோல் மற்றொரு குற்றவாளியான சயனும், மனைவி, மகளுடன் காரில் சென்ற போது கேரள மாநிலம் பாலக்காடு அருகே கண்ணடி என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி வினுபிரியா, நீனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சயனை மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சயனின் கார் விபத்து நடந்த இடத்தில் கேரள போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
சயனின் காரின் போலி நம்பர் பிளேட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விபத்து ஏதேச்சையாக நடந்ததா? கண்டெய்னர் லாரி பின்பக்கமாக கார் மோதியதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்தனர்.
மேலும் கண்டெய்னர் டிரைவரான ஆந்திராவை சேர்ந்த கிரணிடம் கேரள போலீசார் விசாரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X