search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    மிக்ஸ்டு கேப் பதிவு
    X
    மிக்ஸ்டு கேப் பதிவு

    ஐபிஎல் 2022: சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கு வழங்கப்படவுள்ள மிக்ஸ்டு கேப்?

    ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ரன்கள் அடிப்பவர்களுக்கு ஆரஞ்ச் கேப், அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுவது வழக்கம்.
    ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவில் 10 அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ரன்கள் அடிப்பவர்களுக்கு ஆரஞ்ச் கேப், அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கு மிக்ஸுடு கேப் வழங்கப்படவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த தொப்பி ஆரஞ்ச், பர்ப்பிள் இரண்டும் கலந்த நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி பிசிசிஐ இந்த மிக்ஸுடு கேப் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்தும் எந்த தகவலும் கூறப்படவில்லை.

    இணையதளங்கள் மிக்ஸ்டு கேப் என்ற பொய்யான செய்தியை வழங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×