என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உண்மை எது
X
“ஏழைகளுக்காக பிரதமர் மோடி 24 மணி நேரம் தூங்குவார்” - அமித்ஷா பேசியதாக பரவி வரும் போலி வீடியோ
Byமாலை மலர்24 Feb 2022 12:15 PM GMT (Updated: 24 Feb 2022 12:15 PM GMT)
மத்திய மந்திரி அமித்ஷா பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புது டெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "பிரதமர் மோடி ஏழையின் நலத்திற்காக 24 மணி நேரம் தூங்குவார். மம்தா பானர்ஜியோ தனது மருமகனை எப்போது முதலமைச்சர் ஆக்கலாம் என யோசித்து கொண்டிருப்பார்" என பேசுவது போல இருக்கிறது. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உண்மையான வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேசியபோது எடுத்ததாகும். அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசும் அமித்ஷா, ‘பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக 24 மணி நேரம் சிந்தித்துகொண்டிருப்பார். மம்தாவோ தனது மருமகனை முதலமைச்சர் ஆக்குவது குறித்து சிந்தித்துகொண்டிருப்பார்’ என பேசியுள்ளார்.
இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு சிந்தித்துகொண்டிருப்பார் என்பதை தூங்குவார் என மாற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X