search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    தடுப்பூசிக்கு எதிராக இப்படியொரு போராட்டமா? வைரலாகும் புகைப்படம்

    ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக புகைப்படம் வைரலாகி வருகிறது.


    ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை அந்நாட்டு அரசு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. 

    சமீபத்திய கணக்கெடுப்பில் ஜெர்மனியில் மூன்றில் இருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

    இந்த நிலையில், ஜெர்மன் நாட்டு செய்தி வலைதளத்தின் செய்தி ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பலர் ஒன்றுகூடி முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஜெர்மனியில் இப்படித் தான் போராட்டம் நடத்துகின்றனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட் பற்றிய இணைய தேடல்களில், அது மார்பிங் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில், ஜெர்மன் செய்தி நிறுவனம் இதுபோன்ற செய்தியை வெளியிடவில்லை.

    வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள புகைப்படம் செப்டம்பர் 1, 2011 அன்று சிலியில் உள்ள சாண்டியாகோவில் நடைபெற்ற கல்விக்காக உலக முத்த மாரத்தான் எனும் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில், வைரல் படம் சமீபத்திய போராட்டத்தின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×