என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனால்... விஷம தகவலுடன் வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்20 Aug 2021 5:29 AM GMT (Updated: 20 Aug 2021 5:41 AM GMT)
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டத்தை சமீபத்தில் நிறைவேற்றியது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 100-வது நாளில் இந்த திட்டத்தின் கீழ் வெவ்வேறு சாதியை சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அனைத்து சாதியினரும் ஆர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதோடு இந்த திட்டத்திற்கு எதிரான கருத்துக்களும் வலைதளங்களில் தொடர்ந்து வலம்வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், "கார் பைக் கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான் நடக்கும்...!!!" எனும் தலைப்புடன் அர்ச்சகர் ஒருவர் கோவிலை பைப் தண்ணீரால் சுத்தம் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் பதிவுகளிடையே பலர், இந்தியாவின் பிற மாநில கோவில்களின் அர்ச்சகர்கள் சிலைகள், கொடி மரத்தின் மீது தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை இணையத்தில் தேடிய போது, அது ஜூலை 3 ஆம் தேதி தினத்தந்தி செய்தியில் வெளியாகி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த புகைப்படம் "தண்டுமாரியம்மன் கோவிலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்" என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் திட்டம் நிறைவேற்றுவதற்கு முன்னரே கோயில் சுத்தம் செய்யப்பட்ட போது எடுத்தப் படம் அது. அந்த வகையில் வைரல் புகைப்படம், தமிழகத்தில் நிறைவேறி இருக்கும் புது திட்டத்திற்குப் பின் பரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X