என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் போதை பொருட்களுடன் வாலிபர் அதிரடி கைது
- சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்
- அவரிடம் குளுக்கோஸ் பாட்டில், போதைஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவைஇருந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் பகுதிகளில் சமீப காலமாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேகுப்தா உத்தரவின் பெயரில் திண்டிவனம் எஸ்ஐ ஆனந்தராசன் மற்றும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டிவனம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் குளுக்கோஸ் பாட்டில், போதைஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா ஆகியவைஇருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் என்.கே நகரை சேர்ந்த நித்திஷ் கண்ணன்(வயது28) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்