search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டிக்கு கத்திக்குத்து வாலிபர் கைது
    X

    மூதாட்டிக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

    • மூதாட்டியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • கோவில் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் கேள்வி கேட்டதற்கு ஆத்திரமடைந்த அவர் நிர்மலாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள வீராணம் கொய்யாத்தோப்பு பகுதிகள் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மனைவி நிர்மலா (வயது 60) என்பவர்தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் அல்லிக்குட்டை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 22).

    இந்த கோவிலில் வெகுநேரமாக அங்கேயே அமர்ந்து இருந்துள்ளார்.இதைக்கண்ட நிர்மலா ஏன் இங்கே அதிக நேரமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிர்மலாவின் கழுத்தில் குத்தி உள்ளார்.

    நிர்மலாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நிர்மலாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அசோக்குமாரை பிடித்து வீராணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×