என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

- ஹெல்மெட் அணிந்தபடி வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார்.
- கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்
கோவை,
கோவை தடாகம் ரோடு ஏ.கே.எஸ் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி சாந்தி (48), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை ஹெல்மெட் அணிந்தபடி வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார். திடீரென அவர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்ப முயன்றார். உடனே சுதாரித்த சாந்தி நகையை பறிக்க விடாமல் தடுத்தார். இதில், 1.5 கிராம் நகையை பறித்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், அதிர்ச்சியடைந்த சாந்தி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சாந்தி ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், நகையை பறித்து சென்றது சிவகாசியை சேர்ந்த மாரீஸ்வரன் (21) என்பதும், கோவையில் தங்கி பைக் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
