என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திபுரம் பஸ்நிலையத்தில் நர்சிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
    X

    காந்திபுரம் பஸ்நிலையத்தில் நர்சிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

    • ஈஷா யோகா மையம் செல்வதற்காக நர்சும், குடும்பத்தினரும் காத்து நின்றனர்.
    • வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    ஐதராபாத் ஹஸ்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு நேற்று அவர்கள் கோவை வந்தனர். கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையம் செல்வதற்காக நர்சும், குடும்பத்தினரும் காத்து நின்றனர்.

    அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அங்கு வந்தார். பஸ்சுக்கு காத்திருந்த நர்சின் அருகில் சென்ற அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சு, அந்த நபரை கண்டித்து சத்தம் போட்டார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினரும், அங்கு நின்ற பயணிகளும் அந்த நபரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை காட்டூர் போலீஸ்நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 40) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×