என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெகமம் அருகே பெண்ணை தென்னை மட்டையால் தாக்கிய வாலிபர் கைது
    X

    நெகமம் அருகே பெண்ணை தென்னை மட்டையால் தாக்கிய வாலிபர் கைது

    • ஈஸ்வரி பெண் இருப்பது தெரிந்தும் கூட வெட்கம் இல்லாமல் சிறுநீர் கழிக்கிறாய் என தட்டிக்கேட்டார்.
    • புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செட்டிப்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் பெண்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தார். பின்னர் அவர்களின் அருகிலேயே சிறுநீர் கழித்தார்.

    இதனை பார்த்த ஈஸ்வரி பெண் இருப்பது தெரிந்து வெட்கம் இல்லாமல் சிறுநீர் கழிக்கிறாய் என தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அங்கு இருந்த தென்னை மட்டையை எடுத்து ஈஸ்வரியை தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து ஈஸ்வரி நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை தாக்கிய வாலிபர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ரங்கசாமி (38) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் ரங்சாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×