search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கட்டிட தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
    X

    கோவையில் கட்டிட தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

    • வீட்டு முன்பு கழிவு நீர் தேங்கியதால் மோதல் ஏற்பட்டது.
    • வீட்டு ஜன்னலை கல் வீசி எறிந்து உடைத்தார்.

    கோவை,

    கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்தவர் முபாரக் அலி(வயது 54). கட்டிட தொழிலாளி.இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முகமத் உனீஷ்(30).

    மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 குடும்பத்தாருக்கும் இடையே வீட்டு முன்பு கழிவு நீர் தேங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகமத் உனீஷ் இரும்பு கம்பியால் முபாரக் அலியை தாக்கினார். இதில் தலையில் காயமடைந்த அவரை அவரது உறவனர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தனது தந்தையை தாக்கியதால் ஆத்திரமடைந்த முபாரக் அலியின் மகன் பாரீஸ்(27), முகமத் உனீஷ் மற்றும் அவரது தந்தை முகமத் உசைன்(62) ஆகியோரை தாக்கி, அவர்களது வீட்டு ஜன்னலை கல் வீசி எறிந்து உடைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியை தாக்கிய முகமத் உனீசை கைது செய்தனர்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட முபாரக் அலி மற்றும் அவரது மகன் பாரீஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×