search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
    X

    ஏர்வாடி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

    • வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள புலியூர்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வளர்மதி (வயது23). நேற்று வளர்மதி தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரில் குழாயை பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீர் என வளர்மதியை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி அவரது தாயார் ஆவுடைதங்கம் (47) ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான வளர்மதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுரேஷ் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    Next Story
    ×