என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்: கோவையில் கலெக்டர்- ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு
- பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தகுதியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யாமல், ஏற்றுக் கொண்டதாக பதிவு செய்கிறார்களா என்பதையும் பார்வையிட்டனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 7.41 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
இவற்றை ஆன்லைன் முறையில் பரிசீலனை செய்த போது, சிலர் சமர்ப்பித்து இருந்த ஆவணங்களின் எண்கள் தவறுதலாக இருந்தது.அந்த கார்டு தாரர்களுக்கு குறுஞ்செய்தி செல்ல வில்லை.
அந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கடைக்கு ஒருவர் வீதம், 1,401 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அம்மன்குளம், பாப்பநாயக்கன்பாளையம், மட்ட சாலை பகுதிகளில் இந்த பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை கலெக்டர் கிராந்திகுமார், ஆர்.டி.ஓ.கோவிந்தன் ஆகியோர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் தொடர்பான பணியில் அரசியல் குறுக்கீடு இருக்கிறதா? விதிமுறைக்கு உட்பட்டு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றனவா? தகுதியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யாமல், ஏற்றுக் கொண்டதாக பதிவு செய்கிறார்களா என்பதையும் பார்வையிட்டனர்.






