என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் திருமணமான 11 மாதத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
- தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் விக்டோரியா. இவரது மனைவி அனிசியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதம் ஆகிறது.
- இந்நிலையில் பிரசாந்த் விக்டோரியா வீட்டில் இல்லாத நேரம் சேலையால் அனிசியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 7-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் விக்டோரியா. இவரது மனைவி அனிசியா(வயது 25) இவர்களுக்கு திருமணம் ஆகி 11 மாதம் ஆகிறது.
பிரசாந்த் விக்டோரியா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 31-ந் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசாந்த் விக்டோரியா வீட்டில் இல்லாத நேரம் சேலையால் அனிசியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தென்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம் முடிந்து ஓராண்டு ஆகாத நிலையில் அனிசியா தற்கொலை செய்து கொண்டுள்ளதால் தூத்துக்குடி தாசில்தார் கவுரவ்குமார் விசாரணை மேற்கொள்வார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story