என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வால்பாறை அருகே பள்ளி சத்துணவு மையத்தை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
- பருப்பு, முட்டை, அரிசியை தின்று சேதப்படுத்தி விட்டு சென்றது
- யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வால்பா றை அருகே கருமலை எஸ்டேட் பகுதிக்கு நேற்று இரவு வனத்தில் இருந்து வெளியேறிய 9 யானைகள் கூட்டமாக வந்தது.
ஊருக்குள் சுற்றி திரிந்த யானைகள் கூட்டம், அங்குள்ள நடுநிலைப்பள்ளியின் அருகே சென்றது. பின்னர் அங்குள்ள சத்துணவு மையத்தின் ஜன்னல் கதவை உடைத்து, உள்ளே இருந்த பருப்பு, முட்டை, அரிசி, போன்றவைகளை சாப்பிட்டு சத்துணவு மை யத்தை சேதப்படுத்தியது.
மேலும் பொருட்களையும் துதிக்கையால் தூக்கி வீசி சேதப்படுத்தி சென்றது.
தகவல் அறிந்து வந்த வால்பாறை வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்