என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறை அருகே கோவில் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்
    X

    வால்பாறை அருகே கோவில் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகள்

    • தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சம்
    • குடியிருப்பு அருகில் தீ மூட்டி பாதுகாப்பு பணி

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது, வால்பாறைக்கு அருகே உள்ள கருமலை எஸ்டேட், ஐயர்பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட், ஆகிய இடங்களில் 22 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் 22 காட்டு யானைகள் நேற்று இரவு வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் சுவரை இடித்து சேதப்படுத்தியது. வனத்துறையினர் யானைகளை நீண்ட போராட்டத்திற்கு பின்பு வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள் குடியிருப்பு அருகில் தீ மூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையில் அதிகப்படியான பணியாளர்களை நியமித்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×