என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமையல் தொழிலாளியை அடித்து கொலைசெய்தது ஏன்?
    X

    சமையல் தொழிலாளியை அடித்து கொலைசெய்தது ஏன்?

    • கேரளாவில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
    • கொலையாளி பென்னி பரபரப்பு வாக்குமூலம்

    கோவை,

    கோவை ஆடிஸ் வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் அவரை பென்னி என்பவர் அடித்து கொன்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பென்னி ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பி விட்டார்.

    எனவே கோவை போலீசார் கேரளாவுக்கு புறப்பட்டு சென்று திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் பதுங்கி இருந்த பென்னியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பென்னி போலீசிடம் அளித்த வாக்குமூலம் பற்றி கூறப்படுவதாவது:-

    நான் கோவை ஆடிஸ் வீதி பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு சமையல் தொழிலாளி ராஜேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் அவருடன் சேர்ந்து சமையல் வேலைக்கு சென்று வந்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பது வழக்கம். அந்த நேரங்களில் எல்லாம் ராஜேஷ் என்னை சரமாரியாக அடித்து துன்புறுத்துவார்.

    இந்த நிலையில் நான் சம்பவத்தன்று கூலி வேலைக்கு சென்றுவிட்டு ஆடிஸ் வீதி பிளாட்பாரத்தில் படுத்திருந்தேன். அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    உடனடியாக காந்திபுரம் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுகுடித்தேன். அப்போது ராஜேசை கொல்வது என்று முடிவு செய்தேன். பின்னர் மீண்டும் ஆடிஸ் வீதிக்கு வந்து சேர்ந்தேன். அப்போது ராஜேஷ் பிளாட்பார மேஜையில் படுத்து இருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு கொலைவெறி ஏற்பட்டது. எனவே அங்கு கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினேன்.

    இதில் ராஜேஷ் இறந்து விட்டார். அதன்பிறகு உருட்டுக்கட்டையை வீசி விட்டு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கேர ளாவுக்கு தப்பி சென்றேன்.

    சமையல் தொழிலாளி ராஜேஷ் கொலை வழக்கில் போலீசார் என்னை சந்தேகப்படமாட்டார்கள் என கருதினேன். ஆனால் அவர்கள் சரியாக துப்பறிந்து, கேரளாவில் பதுங்கியிருந்த என்னை மடக்கி பிடித்து விட்டனர்.

    இவ்வாறு போலீசாரிடம் பென்னி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கோவை சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி படுகொலை செய்ததாக, பென்னியை போலீசார் கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    Next Story
    ×