search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் என்ன பயன்?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
    X

    (கோப்பு படம்)

    மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் என்ன பயன்?- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    • பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம்.
    • சட்டமன்ற தேர்தல் வரும் போது அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் விஷயங்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வரகூடாது என்று யாருமே சொல்லகூடாது. அவர்கள் வருவதால் என்ன பயன் என்பது போக போகத்தான் தெரியும்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம். தேர்தல் ஆணைய அட்டவணையின்படி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் போது அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×