search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தூக்குப்போட்டு தற்கொலை

    • போலீசில் புகார் கொடுப்பேன் என பெண் மிரட்டியதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36). இவர் முதல் மனைவியை பிரிந்து சாந்தி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட சாந்தி போலீசில் புகார் செய்யப்போவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பசாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×